துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்றாமிடத்தில் இராமநாதபுரம் எஸ்.பி.
திருவாடானை, ஆக-31
2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது தென் மண்டல காவல்துறைத் தலைவர் தா.ச.அன்பு தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சரக டி.ஐ.ஜிக்கள் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை, பழனி, ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டுகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாநகர துணை ஆணையர்கள் என 18 காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகளை கொண்டு சுடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல காவல்துறை தலைவர் தா.ச.அன்பு, முதலிடத்தையும், தேஷ்முக் சேகர், கமாண்டன்ட், த.சி.கா 6ஆம் அணி இரண்டாம் இடத்தையும், இராமநாதபுரம் எஸ்.பி, 3ம் இடத்தையும் பிடித்தனர்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்