கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொல்லைப்புற வழியாக 5 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாஜக மோடி மத்திய அரசுக்கு கண்டனம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானமும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் முஸ்லிம்களை பாரபட்சமின்றி விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை
திருச்சி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொல்லைப்புற வழியாக 5 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாஜக மோடி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 05.06.2021 சனிக்கிழமை காலை பாலக்கரை காஜா கடை சந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இணைய செயலி மூலம் தெற்கு மாவட்ட தலைவர் முனைவர் எம்.ஏ.எம். நிஜாம் தலைமையில் நடைபெற்றது. யூத் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜி சையது ஹக்கீம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் வி.எம். பாரூக், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் இந்த செயற்குழு கூட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக எடுத்து பேசினார்கள். பின்னர் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் கொரோனா ஊரடங்களால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 150 பேர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அரசிற்கு பாராட்டு.
நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் தமிழ்நாடு முதலமைச்சராக பொருப்பேற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கின்றது.
கொரோனா தொற்று அசாதாரண
சூழ்நிலையில் பொருப்பேற்ற நாள் முதல் மக்களின் துயர்துடைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீறிய வழிகாட்டுதலில் அரும்பணிகளாற்றி வரும் மாண்புமிகு அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், முன் களப் பணியாளர்கள் உள்ளிட்ட வர்களுக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது. அரசின் நடவடிக்கை களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட இக்கூட்டம் கேட்டுக் கொள் கின்றது.
ஆம்புலன்ஸ் சேவை தொடங்குதல்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பாக பொது மக்கள் மருத்துவ அவசர தேவைக்கு ஏற்ற வகையில் ஆம்புலன்ஸ் சேவையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பாக – மாருதி Eco ( ரூபாய். 835000 ) என்ற வாகனம் வாங்கப் படுகிறது.
இத் தொகை அனைத்து தப்பினரிடமிருந்து வசூலிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்படும் என்று இக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கீழ்கண்ட நபர்கள் மூலம் நிதி கமிட்டி குழு அமைக்கப்படுகிறது.
கொரோண நிவாரணப் பணிகள்
கொரோணா கடுமையான சமூக பரவல் உள்ள சூழ்நிலையில் மக்கள் பொருளாதார சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிட வேண்டும் என்று தலைமை ஆணைங்கிணங்க நிவாரண பணிகளை மக்களுக்கும் உதவிடும் வகையில் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக தந்துதவிய அனைத்து நல்லுலங்களுக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரியபடுத்திக் கொள்கிறோம். கீழ்கண்ட நபர்கள் கொரோனா அவசர உதவிக்காக செயல்படுவார்கள்
1. கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான்.
2. பி.எம்.ஹூ மாயூன்.
3. ஏ.எம்.எச். அன்சர் அலி
4. ஜி.எச்.ஹக்கீம்
5. எம். சாதிக்குல் அமீன்
6. எஸ். சம்சுதீன்
7. எம். ஷாஜஹான்
8. எம்.பரகத் அலி
சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்திடுக. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறும் 7 பேர்களையும் விடுவிப்பதற்காக தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது பாராட்டக்குறியது. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் முஸ்லிம்களை பாரபட்சமின்றி விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
மத்திய அரசுக்கு கண்டனம்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொல்லைப்புற வழியாக 5 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய பாஜக மோடி மத்திய அரசை இக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
மூன்று மாநிலங்களில் 13 மாவட்டங்களில் வசிக்கும் அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மே 28 உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு தொடுத்துள்ளதை இக் செயற்குழு கூட்டம் வரவேற்கிறது. முஸ்லிம்களின் இறை வணக்க பள்ளிவாசலில் உள்ள உலமாக்களுக்கும், பள்ளிவாசலிலின் மோதினார்களுக்கும் வாழ்வாதாரம் காக்க COVID19 நிவாரண உதவித்தொகை மளிகைப் பொருட்கள் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இக் செயற்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசிடம் மனமுவந்து உதவிசெய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புரவலர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ அபுதாபி நோபல் மரைன் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷாஹுல் ஹமீது அவர்கள் 50லட்சம் மதிப்புள்ள 15.220 மெட்ரிக் டன் எடையுள்ள 330 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசின் SIPCOT நிறுவனத்திற்க்கு வழங்கியுள்ளார்.
துபாய் பிளாக் துளிப் நிறுவனத்தின் உரிமையாளர் தஞ்சை நடுக்கடை யஹ்யா அவர்கள் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆக்சிஜன் கூடம் அமைக்கும் பணிகளை தொடங்க ரூபாய் 1 கோடி நிதியூதவி வழங்கியுள்ளார். துபாய் பவர்ஹவுஸ் குழுமத்தின் உரிமையாளர் ராமநாதபுரம் வழுதூர் ஜாஹிர் உசேன் அவர்கள் தமிழக அரசுக்கு ரூ. 10 லட்சம் நிதி அளித்திருக்கிறார்.
மக்களின் உயிர் காக்க தமிழக அரசுக்கு உறுதுணையாக நின்று உதவிசெய்த தொழிலதிபர்களுக்கும்,நிவாரண நிதியுதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இந்த இணைய செயலி மூலம் கூட்டத்தில் மாநில மாணவரணி பொதுச் செயலாளர் அன்சர் அலி, திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் செயலாளர் ஹாஜி சையது ஹக்கீம், திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் பொருளாளர் சாதிக்குல் ஆமீன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹாஜி சம்சுதீன் மற்றும் ஸதெற்கு மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பிரைமரி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள். முடிவில் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹூமாயூன் நன்றி கூறினார். ஷாகுல்ஹமித்