• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டு

admin by admin
July 30, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டு
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டு
திருச்சி,
                  வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனை நேரில் அழைத்து பரிசு வழங்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பாராட்டினார். அதேபோல் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமதுவும் பாராட்டினார்.
        திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி குணா (வயது 29). இவர்களது மகள் லித்திகா (8). நேற்று முன்தினம் கிணற்றில் குளிக்கச்சென்ற போது எதிர்பாராத விதமாக தாய், மகள் இருவரும் தவறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு சத்தமிட்டனர்.
      இதைப்பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் 8 வயது மகன் லோஹித் உயிரை துச்சமென நினைத்து கிணற்றில் குதித்து தாய்,  மகள் இருவரையும் காப்பாற்றப்போராடினான். ஆனால் சிறுவன் என்பதால் 8 வயது சிறுமியான லித்திகாவை மட்டுமே அவனால் காப்பாற்ற முடிந்தது. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமியை காப்பாற்றி மேலே கொண்டு வந்தார்.
                பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினரும் விரைந்து வந்தனர். இருப்பினும் குணாவை இறந்த நிலையில் தான் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் பற்றி வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் 8 வயதே ஆன சிறுவனான லோஹித்தின் வீரதீர செயல் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததுடன் அனைவரும் பாராட்டினர்.  மேலும் இதுபற்றிய தகவல் அறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு சிறுவனை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார். அத்துடன் சிறுவனின் துணிச்சலை பாராட்டி ரூ.5 ஆயிரம் காசோலையும் வழங்கினார். இதே போல் சிறுவனின் செயலை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமதுவும் பாராட்டினார்.                                                                                                          கே.எம்.ஷாகுல்ஹமித்
Previous Post

திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1,800 கிலோ 55 மூட்டை குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் 5 பேர் கைது 

Next Post

உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் சாலையோர வணிகர்களுக்கான பயிற்சி முகாம்

admin

admin

Next Post
உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் சாலையோர வணிகர்களுக்கான பயிற்சி முகாம்

உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் சாலையோர வணிகர்களுக்கான பயிற்சி முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In