• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.‌.

admin by admin
June 7, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
0
SHARES
177
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.‌.

இராமநாதபுரம், ஜுன்,6-
 மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாவட்ட அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் , 07.06.2021 முதல் 14.06.2021 காலை 06.00 மணிவரை தமிழக அரசு மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது . இந்த ஊரடங்கின் போது , இராமநாதபுரம் மாவட்டத்தில் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது . 
இராமநாதபுரம்
              இராமநாதபுரத்தில் உள்ள பவுண்டுகடை ரோடு , வைசியர் வீதி , பாண்டிகண்மாய் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் தவிர மீதமுள்ள பலசரக்கு கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . இப்பகுதிகளில் சில்லரை விற்பனை கடைகள் , நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை . அரண்மனைப் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள் செயல்பட அனுமதி இல்லை . இப்பகுதிகளில் சமூக இடைவெளியினை பின்பற்ற முடியாத காரணத்தால் , இங்கு செயல்படும் சிறு கடைகள் , காய்கறி கடைகள் , மீன் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் செயல்பட அனுமதி இல்லை . ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காய்கறி கடைகள் , பழக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . மேலும் , பாரதி நகர் அம்மா பூங்கா பகுதியில் உள்ள காய்கறி கடைகள் , பழக்கடைகள் செயல்பட தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது . மீன் மொத்த வியாபாரம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது 
பரமக்குடி
              பரமக்குடி சின்னக்கடை வீதியில் சமூக இடைவெளியினை பின்பற்றி வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் , இப்பகுதியில் சில்லரை வியாபாரம் மற்றும் மொத்த வியாபாரம் செய்ய அனுமதி இல்லை . ஏற்கனவே செயல்பட்டு வரும் பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் , எமனேஸ்வரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் .
முதுகுளத்தூர், கமுதி
     முதுகுளத்தூர் , கமுதி ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்களில் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . 
சாயல்குடி
      சாயல்குடி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் .
இராமேஸ்வரம்
       இராமேஸ்வரம் இரயில் நிலையம் அருகே உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பயணிகள் தங்கும் இடத்தில் செயல்படும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து அதே இடத்தில் செயல்படும் .மீன் மொத்தவியாபாரம் பழைய மார்க்கெட் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் டவர் அருகில் தொடர்ந்து செயல்படும் .
 ஆர்எஸ்மங்கலம், அபிராமம், பார்த்திபனூர்
         ஆர்.எஸ்.மங்கலம் , அபிராமம் மற்றும் பார்த்திபனூர் பகுதிகளில் ஏற்கனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . 
தொண்டி
      தொண்டி பகுதிகளில் ஏற்கனவே பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் தொடர்ந்து செயல்படும் . மீன்மொத்த வியாபாரம் கிழக்கு கடற்கரை சாலையில் வட்டாணம் செல்லும் வழியில் செயல்படும் .
கீழக்கரை
            கீழக்கரை பகுதியில் காய்கறி கடைகள் , பழக்கடைகள் , பூக்கடைகள் நடமாடும் வாகனங்கள் மூலம் தொடர்ந்து செயல்படும் . மீன் மொத்தவியாபாரம் கடற்கரையில் தொடர்ந்து செயல்படும் . 
வணிக வளாகங்கள்
             வணிக வளாகங்கள்  இயங்க 26.042021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது . வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது . மாவட்டம் முழுவதும் வாரச்சந்தைகள் எங்கும் செயல்பட அனுமதி இல்லை . கட்டுமானப் பொருட்கள் , எலெக்ட்ரிக்கல் கடைகள் , பேக்கரிகள்் செயல்பட அனுமதிக்கப்படுகிறது . மாவட்டம் முழுவதும் தேநீர் விற்பனை கடைகள் திற்க்க அனுமதி இல்லை . பேக்கரியில் இனிப்பு , காரம் மற்றும் ரொட்டி வகைகள் மட்டும் பார்சல் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது . அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை  மட்டும் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , மதியம் 12.00 மணி முதல் 03.00 மணி வரையிலும் மற்றும் இரவு 06.00 மணி முதல் 09.00 மணி வரையிலும் வழங்க தொடர்ந்து அனுமதிக்கப்படும் . அனைத்து காய்கறி கடைகளும் , மொத்த மற்றும் சில்லரை வணிகங்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . அனைத்து கடைகளும் சமூக இடைவெளியினை பின்பற்றி செயல்பட வேண்டும் . ஏற்கனவே கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட உத்தரவுகள் தொடர்ந்து செயல்படும் .  இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்
.
                                                                                                                                              எம்.சோமசுந்தரம்
Previous Post

திருச்சியில் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேர் விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சி

Next Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

admin

admin

Next Post
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In