மகளிர் நலன் கருதி குடிசைத் தொழில் செய்ய வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தர ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் பாலாஜிவாக்குறுதி.
அச்சிறுப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல்சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் பாலாஜி, பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வரும் அக்டோபர் 9.10.2021,ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தனக்கு வாக்குகள் சேகரிக்க மின்னல்சித்தாமூர், மின்னல் கீழ்மின்னல், கீழ்பட்டு, உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது தனக்கு ஒதுக்கப்பட்ட பூட்டுசாவி சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். அப்போது வாக்காளர் பெருமக்களிடம் கூறுகையில் மகளிர் நலன் காக்க குடிசை தொழில் செய்ய அனைத்து வகையிலும் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி உதவி செய்து தரப்படும், குறிப்பாக சமுதாயக் கூடத்தில் இருந்து சத்துணவு கூடம் வரை தரமான இணைப்பு சாலை அமைத்து தரப்படும், மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் செயல்படாத இ-சேவை மையத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும், மேலும் லஞ்ச லாவண்யத்தை ஒழித்து ஊழல் இல்லாத நல்லாட்சியை அமைப்பேன் என தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் ஆரவாரத்துடன் பூமாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூட்டு சாவி சின்னத்தின் வேட்பாளர் வழக்கறிர் பாலாஜியை வரவேற்றனர். மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர்.