• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாநில செய்திகள்

பெரிய நகரங்களில்ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் பின்பற்றப்படுகிறதா கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

admin by admin
August 31, 2021
in மாநில செய்திகள்
0
பெரிய நகரங்களில்ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் பின்பற்றப்படுகிறதா கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
பெரிய நகரங்களில்ஆழ்துளை கிணறு அமைக்கும் போது விதிகள் பின்பற்றப்படுகிறதா கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
திருச்சி, ஆகஸ்ட்.30,

      தமிழ்நாடு கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் கூட்டம் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் பொறியாளர் பெரு . கணபதிதலைமையில்      சங்கமம் கூட்டம் மற்றும் 2021 – 2022 புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு  திருச்சி மாவட்ட தலைவர் அன்பழகன் மாநில செய்தி தொடர்பாளர் தனபால் தஞ்சை மாவட்டத் தலைவர் திருமாறன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முஹம்மது ஹம்சான் திருச்சி மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலச் செயலாளர் சாம்ராட் அனைவரையும் வரவேற்றார்.
       மாநில பொருளாளர் சுரேஷ் கோபி சிறப்புரையாற்றி தீர்மானங்களை வாசித்தார். கட்டுமானத் துறைக்கு அத்தியாவசிய தேவையான சிமெண்ட் இரும்பு கம்பி மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தை தடுக்க மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிடங்கள் 2019ஆம் ஆண்டு ஆணைப்படி தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் விதிகளுக்கு உட்பட்டு கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஆய்வு செய்ய பறக்கும்படை அமைத்திட வேண்டும்.
        தரமான கட்டிடங்களை உருவாக்க மற்றும் திறமையான கட்டுமான பொறியாளர்கள் ஐ உருவாக்க மேலும் போலி கட்டுமான பொறியாளர்களை தடுக்க கட்டுமான பொறியாளர்கள் என தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியமான சிமெண்ட் இரும்பு கம்பி மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு அங்காடிகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்திட வேண்டும்.
         தமிழகத்தில் உள்ள போலி( M-Sand )சாண்ட் B-Sand) உற்பத்தியாளர்களைஇனங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை தவிர்க்க போலியான விலையேற்றத்தை தடுத்து நிறுத்தி தமிழக அரசின் நேரடி விற்பனை நிலையத்தை அமைத்து கட்டட பொறியாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும்.
மாட்டு வண்டியில் மணல் விற்பனை செய்யும் ஏழை விவசாயிகளுக்கு சரியான உரிமம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
         மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கட்டுமான சம்பந்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மேலும் இதர கட்டுமான சார்ந்த வேலைகளுக்கு தரத்தை நிர்ணயிக்க தரக்கட்டுப்பாடு சான்றிதழ்கள் NiT  மூலம் வழங்க வேண்டும்.  தமிழகத்தில் நடைபெறும் கட்டுமான தொடர்பான தர ஆய்வுகளை மேற்கொள்ள எங்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக செய்து தரச் சான்றிதழ் வழங்கி வருகிறோம்.  இதனை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசை எங்கள் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம்.
             நிலத்தடி நீரை பாதுகாக்க பெரு நகரங்களில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் விதிகளுக்குப் புறம்பாக அதிக ஆழத்தில் துளையிட்டு குடிநீர் எடுப்பதன் மூலம் கடல்நீர் உட்புகுந்து குடிநீர் கெட்டுப் போகிறது எனவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பது விதிகள் பின்பற்றப் படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் மாநில வணிக மேம்பாட்டு தலைவர் சாதிக் பாட்சா அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
Previous Post

முறைகேட்டில் ஈடுபட்ட வக்பு வாரிய பணியாளர் பணியிடை நீக்கம் முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் முறைகேடாக அபகரிக்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன திருச்சியில் வக்ஃப் வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் பேட்டி திருச்சி ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் முறைகேடாக அபகரிக்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முறைகேட்டில் ஈடுபட்ட வக்பு வாரிய பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். திருச்சி பிரஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : "கடந்த ஆட்சியிலும் மற்றும் இதுவரை வக்பு வாரியத் தலைவராக பொறுப்பில் இருந்தவர்கள் செய்யாத அல்லது செய்யத் தவறிய பல்வேறு முக்கிய பணிகளை செய்யவுள்ளோம். குறிப்பாக, ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட மற்றும் அபகரிக்கப்பட்ட வக்பு வாரியத்துக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்கும் மிகப் பெரிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். தங்களது ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, பண பலம் ஆகியவற்றை பயன்படுத்தி, இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிக்கும் பணியில் மதரசாக்கள், தர்காக்கள் உள்ளிட்ட நிர்வாகங்களுக்கு மத்தியில் பல்வேறு மோதல்கள், குற்றச்சாட்டுகள் உள்ளதால், அந்த நிர்வாகங்களைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை வக்பு வாரியம் சட்டரீதியாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலேயே முதல்முறையாக வக்பு வாரியத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அலுவலர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனிவரும் காலங்களிலும் இதுபோன்று முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முறைகேடுகளில் ஈடுபடும் வக்பு வாரிய கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மீது இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்படுவோர் மீது எந்த சமரசத்துக்கும் இடமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக மூத்த கண்காணிப்பாளர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பலர் மீது வந்துள்ள முறைகேடு புகார் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரியச் சொத்துகள் மீட்கப்பட்டு பொதுமக்களுக்கான கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும் மற்றும் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். வக்பு வாரியத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடனும், அதிகாரம் மற்றும் அரசியல் குறுக்கீடுகளுக்கு இடமின்றி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வக்ஃப் வாரிய அலுவலர் தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 27 பணியிடங்களுக்கு 8,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முறையாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவர். வக்பு வாரிய பணியிடங்களுக்கு இனி வெளிப்படைத்தன்மையுடன் ஆள் தேர்வு நடத்தப்படவுள்ளது. முறைப்படி அறிவிப்பு செய்து, விண்ணப்பம் பெற்று, தேர்வு நடத்தி, நல்ல மதிப்பெண் பெறும் உரிய தகுதிவாய்ந்தவர்கள் மட்டுமே வக்பு வாரிய பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவர். அந்தவகையில், வக்பு வாரியத்தில் புதிதாக 27 இளநிலை அலுவலர்களைத் தொடர்புடைய அரசுத் துறை மூலம் போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வக்பு வாரியம் நேரடியாக தலையிடாது".தமிழகத்தில் வக்பு வாரியத்தின் கீழ் 11 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் அரசியல் தலையீடு இன்றி அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்கள் காயல் மகபூப், மில்லத் எம்.பி. முஹம்மது இஸ்மாயில், தென் சென்னை மாவட்ட செயலாளர் மடுவை எஸ். பீர் முஹம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கோம்பை ஜெ. நிஜாமுதீன், என்.கே. அமீருதின், அப்துல் முத்தலிப் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Next Post

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.54.27 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட பகுதியில் பழமையான குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி

admin

admin

Next Post
சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.54.27 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட பகுதியில் பழமையான குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.54.27 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட பகுதியில் பழமையான குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In