• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home தேசிய செய்திகள்

புதுதில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் அனைத்து அரசு அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா எச்சரிக்கை

admin by admin
August 9, 2021
in தேசிய செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
புதுதில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் அனைத்து அரசு அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா எச்சரிக்கை
                  புதுதில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
         புதுதில்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமா் நரேந்திர நரேந்திர ஸமோடி, தேசியக் கொடியேற்றி உரையாற்ற இருக்கிறாா். இந்நிலையில், இது தொடா்பாக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகளின் செயலா்களுக்கு அமைச்சரவைச் செயலா் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புதுதில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமரும் உரையாற்ற இருக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு அதிகாரிகள் பலருக்கும் உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணா்ந்து அழைப்பு பெற்ற அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். ஏற்கெனவே, இந்த நிகழ்ச்சியில் பல அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது முறையான செயல் அல்ல என்று கருதப்படுகிறது. எனவே, நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டால் அது தீவிரமாகக் கருத்தில் கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா பிரச்னை காரணமாக சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் இணைச் செயலா்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ளவா்களுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Previous Post

தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துப்படுகிறது அரசின் வருவாயை விட செலவு அதிகரிப்பு

Next Post

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘விக்ராந்த்’ எனப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கம்

admin

admin

Next Post
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘விக்ராந்த்’ எனப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கம்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘விக்ராந்த்’ எனப்படும் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In