நம்புதாளையில் ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவில் பிரதோச வழிபாடு
உப்பூர், ஆக.20,
இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவில்.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், விபூதி, பஞ்சாமிர்தம், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.மேலும் தட்சிண மூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், தம்பதி சமேத நவக்கிரகங் களுக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வாசு.ஜெயந்தன்