• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

தொண்டியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம்

admin by admin
September 17, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
தொண்டியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம்
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தொண்டியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம்

தொண்டி, செப்.17-
           இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் திருவாடானை நெற்களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் தொண்டி அலுவலகத்தில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
         இராமநாதபுர மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் சந்தைபடுத்துதல் துறையின் துணை இயக்குநர் மூர்த்தி, தொண்டி கிளை கனரா  வங்கியின் மேலாளர் சங்கர முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு  தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் வெள்ளி மலர் அனைவரையும் வரவேற்று பேசினார். சமூக ஆர்வலர் சார்லஸ் நிகழச்சியை தொகுத்து வழங்கினார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி         மேலாளர் பேசும்போது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வளர்ச்சி பெற பங்குதாரர்கள்  ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாததாகும். அனைவரும் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பாதியளவாவது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் பெற வேண்டும். அதேபோல தாங்கள் விளைவிக்கும் பொருட்களில் ஒரு பகுதியாவது உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் விற்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயிகள் லாபம் அடைய முடியும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் வளர்ச்சி அடைய முடியும் என்று பேசினார்  இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை இயக்குனர் மூர்த்தி பேசும்போது, மத்திய அரசு எல்லா திட்டங்களையும் தனிநபர்களுக்கு கொடுப்பதில்லை. குழுக்களை மையப்படுத்திதான் வழங்குகின்றனர்.நபார்டு வங்கி மூலமாக இந்தியா முழுவதும் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அரசு வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் முறையாக பெற்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கிட வேண்டும். ஏற்கனவே துறை மூலமாக ரூ.60 லட்சம் மதிப்பிலான மதிப்புக்கூட்டு உபகரணங்களை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து இந்நிகழ்சியில் கலந்துகொண்ட பங்குதாரர்களுக்கு பங்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் திருவாடானை நெற் களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜெயபால் நன்றி கூறினார்.
Previous Post

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள் மக்களின் உணர்வுகளையொட்டி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் மணப்பாறையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி

Next Post

தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள்அமைச்சர்  மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

admin

admin

Next Post
தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள்அமைச்சர்  மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள்அமைச்சர்  மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In