• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல் ஒருவர் கை

admin by admin
September 24, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல் ஒருவர் கைது 
திருச்சி ,  
             திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
        மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, இங்கிருந்தும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்தவகையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு கூரியர் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு திருச்சியிலிருந்து வெளிநாட்டிற்கு கொரியர் அனுப்ப வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், சுமார் 10 கிலோ எடைகொண்ட கவர் ஒன்றை கொரியர் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தது தெரிய வந்தது.
    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 32) என்பதும், அவர் கொண்டுவந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.  மேலும், எட்டரை கோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றார்கள்.
Previous Post

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் 1 லட்சம் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி ரூ.15 லட்சம் இலக்கு நிர்ணயம் விற்பனை நிலைய மேலாளர் ஆர். கங்காதேவி தகவல்

Next Post

மும்பை-அகமதாபாத் விரைவு ரயில் திட்டம் குறித்த காலத்துக்குள், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா உறுதி

admin

admin

Next Post
மும்பை-அகமதாபாத் விரைவு ரயில் திட்டம் குறித்த காலத்துக்குள், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா உறுதி

மும்பை-அகமதாபாத் விரைவு ரயில் திட்டம் குறித்த காலத்துக்குள், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In