• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி, ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தைகே.என்.நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வு

admin by admin
June 15, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
திருச்சி, ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தைகே.என்.நேரு,  ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வு
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி, ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வு
திருச்சி ,
              திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூரில் அமைந்துள்ள ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்ற நிலையத்தில் தமிழக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கூட்டு குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேற்று  நேரில் ஆய்வு செய்தனர்.
            ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2009 ஆம் ஆண்டு காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிஅவர்களால் தொடங்கப்பட்டது.
           இதனால் புதுக்கோட்டை, சிவகங்கை,ராமநாதபுரம்ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன் பெறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 எம்.எல்.டி நீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சரியாக நீர் விநியோகிக்கப்படவில்லை என ராமநாதபுரத்திலிருந்து முதலமைச்சருக்கு புகார் வந்தது. இஅதனை அடுத்து  புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற் கொண்டனர்.
         கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது – முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் 100 எம்.எல்.டி வழங்கப்பட்டு வந்த நீர் தற்போது 75 எம்.எல்.டி மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பு, முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுவது, பராமரிப்பு இல்லாத காரணங்களால் இத்தகைய பிரச்சனை நிலவி வருகிறது.
     ராமநாதபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்களில் என்னனென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அந்த அந்த மாவட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொள்வோம். அதன் பின்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரும், தமிழ்நாடு ஜல் ஜீவன் மிஷன் திட்ட இயக்குனருமான மகேஷ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
        இத்திட்டத்தின் வாயிலாக 16 லட்சம் மக்கள் பயன்பெறுகிறார்கள் அதை 20 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தால் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.இந்த திட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்யப்படும் விரைவில் முதலமைச்சர் அது குறித்து முடிவெடுப்பார்.அதே போல ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
       இந்த ஆய்வின் போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற  தொகுதி உறுப்பினர் பழனியாண்டி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன்,  மாவட்ட துணைச் குடமுருட்டி சேகர், சேர்மேன் துரைராஜ், செயலாளர் ஒன்றிய செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல், இளைஞரணி சிங்காரம் கைகுடிசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.                                                ஆனந்தன்
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

திருச்சி மாவட்டத்தில்  9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

admin

admin

Next Post
திருச்சி மாவட்டத்தில்  9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில்  9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In