• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 520 பள்ளிகள் திறக்கப்படுகிறது முதல் ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்த அறிவுறுத்தல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தகவல்

admin by admin
August 31, 2021
in திருச்சி, மருத்துவம்
0
திருச்சி மாவட்டத்தில் 520 பள்ளிகள் திறக்கப்படுகிறது முதல் ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்த அறிவுறுத்தல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தகவல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி மாவட்டத்தில் 520 பள்ளிகள் திறக்கப்படுகிறது முதல் ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்த அறிவுறுத்தல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தகவல்
திருச்சி,
         திருச்சி மாவட்டத்தில் நாளை  520 பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் ஒரு மாதத்துக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு மட்டுமே நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறினார்.
        தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து அமலில் உள்ள ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாளை (புதன்கிழமை) முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
   பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்படுவதால், திருச்சி மாவட்டத்தில் இதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  இந்த பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகள்
           இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறுகையில், தமிழக அரசு உத்தரவின்பேரில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மேஜைக்கு 2 மாணவர் வீதம் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள். மழையோ, வெயிலின் தாக்கமோ இல்லாமல் சீதோஷ்ண நிலை இருந்தால் திறந்தவெளியில் மாணவர்களை அதிக இடைவெளியுடன் அமர வைத்து பாடம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
         பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். உடல் வெப்பநிலை குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக உள்ள மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். காய்ச்சலுடன் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர கூடாது. மேலும்,பள்ளிக்குவரும்மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்படும். பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்களை மனரீதியாக தயார்ப்படுத்தும் விதமாக முதல் ஒரு மாதத்துக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி இதேபோல் திருச்சி மாவட்டத்தில் கல்லூரிகளும் நாளை (புதன்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளதால், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும், திருச்சியில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் பலரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.
Previous Post

தமிழ்நாடு அறிவியல் இயக்க முதுகுளத்தூர் ஒன்றிய மாநாடு. 

Next Post

மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் இளைஞா்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பொதுச் சேவை வழிகாட்டு பயிற்சியை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது தொடங்கி வைத்தா

admin

admin

Next Post
மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் இளைஞா்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பொதுச் சேவை வழிகாட்டு பயிற்சியை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது தொடங்கி வைத்தா

மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் இளைஞா்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பொதுச் சேவை வழிகாட்டு பயிற்சியை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது தொடங்கி வைத்தா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In