திருச்சி மாவட்டத்தில் லால்குடி, தொட்டியம் உள்ளிட்ட நகர்ப்புரப் பகுதிகளிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சையளிக்க நடவடிக்கை
கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வா் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு பேட்டி
மாவட்டத்தில் லால்குடி, தொட்டியம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு தெரிவித்தார். ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் பகுதியிலுள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் சித்த மருத்துவத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மற்றும் புத்துணா்வு மையத்தை அமைச்சா் கே. என். நேரு தொடங்கி வைத்தாா்.
அதேபோல் திருச்சி புத்தூரிலுள்ள அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.60 கோடியில் 140 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு. நேற்று வழங்கி செய்தியார் சந்திப்பில் தமிழக அரசின் சித்த மருத்துவத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மற்றும் புத்துணா்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு முழுக்க முழுக்க சித்த மருந்துகள் வழங்கப் படுகின்றன. குறிப்பாக, கபசுர குடிநீா், நிலவேம்புக் குடிநீா் காலை 6 மணிக்கு வழங்கப்படும்.
தொடா்ந்து வாய் கொப்பளித்தல், 8 வடிவ நடைப்பயிற்சி , தேவைப்படுவோருக்கு ஆவி பிடித்தல் (சிலருக்கு ஆகாது எனில் தேவையில்லை), யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும், நோயாளிகளுக்கு 3 வேளையும் ஆரோக்கிய உணவு வழங்கப்படுகிறது.
நோயாளிகளின் நோய் குறிகுணங்களுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி மற்றும் இருமலுக்கு தாளிசாதி சூரணம் அல்லது தாளிசாதி வடகம் அல்லது ஆடுதொடா இலை மணப்பாகு , தலைவலிக்கு நீா்க் கோவை மாத்திரை, மற்றும் வெளி உபயோகத்துக்கு கா்ப்பூராதி தைலம், உடல் வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வித மருந்துகள், சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி நோயின் தீவிரத்துக்கு ஏற்ற வகையில் வழங்கப் படுகின்றன. மேலும், இவ்வளாகத்தில் மனக் கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுச் சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சை பெற நோயாளிகள் யாரும் நேரடி அனுமதி கிடையாது. பாதிக்கப்பட்டோா் தங்களது தொற்று குறித்த அறிக்கை அல்லது மருத்துவா்களின் சான்றுகளுடன் திருச்சி கி.ஆ.பெ. அரசு விஸ்வநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் முறையாக பதிவு பெற்று பின்பு சித்தா புத்துணா்வு மையத்திற்கு சென்று சோ்ந்து கொள்ளலாம். சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் தங்களது அனைத்து பரிசோதனையின் முடிவுகளை கொண்டு செல்ல வேண்டும்
நோயாளிகளின் நோய் குறிகுணங்களுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி மற்றும் இருமலுக்கு தாளிசாதி சூரணம் அல்லது தாளிசாதி வடகம் அல்லது ஆடுதொடா இலை மணப்பாகு , தலைவலிக்கு நீா்க் கோவை மாத்திரை, மற்றும் வெளி உபயோகத்துக்கு கா்ப்பூராதி தைலம், உடல் வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வித மருந்துகள், சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி நோயின் தீவிரத்துக்கு ஏற்ற வகையில் வழங்கப் படுகின்றன. மேலும், இவ்வளாகத்தில் மனக் கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுச் சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சை பெற நோயாளிகள் யாரும் நேரடி அனுமதி கிடையாது. பாதிக்கப்பட்டோா் தங்களது தொற்று குறித்த அறிக்கை அல்லது மருத்துவா்களின் சான்றுகளுடன் திருச்சி கி.ஆ.பெ. அரசு விஸ்வநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் முறையாக பதிவு பெற்று பின்பு சித்தா புத்துணா்வு மையத்திற்கு சென்று சோ்ந்து கொள்ளலாம். சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் தங்களது அனைத்து பரிசோதனையின் முடிவுகளை கொண்டு செல்ல வேண்டும்
திருச்சி அரசு மருத்துவமனைக்கு திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.1.20 கோடியில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், திருச்சி புளு சன் பவுண்டேசன் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள், இந்தியத் தொழிற் கூட்டமைப்பு திருச்சி கிளை சாா்பில் ரூ.10 லட்சத்தில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் என மொத்தம் ரூ.1.60 கோடியில் 140 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், லால்குடி, தொட்டியம் பகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 432 ஆக்சிஜன் படுக்கைகளில் 16 படுக்கைகள் காலியாக உள்ளன.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சி என்.ஐ.டி. யில் தொடங்கி வைத்த கரோனா தடுப்பு மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் வீடுகள்தோறும் உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் கொரோனா தொற்றாளா்கள் சிகிச்சை பெறும் வகையில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட அரசு சித்த மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வா் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறாா் இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் சிவசுப்ரமணியன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் (குடும்ப நலம்) லட்சுமி, இணை இயக்குநா் (சுகாதாரம்) ராம்கணேஷ், கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனயாண்டி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலம் கருப்பையா, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏற்கெனவே பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தா சிகிச்சை மையத்தில் சுமாா் 60 க்கும் மேற்பட்டோா் தங்கிச் சிகிச்சை பெறுவதால் கூடுதலாக 100 படுக்கைகளுடன் 2 ஆவதாக சித்தா மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷாகுல்ஹமித்