திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு முகாமில் ஒரேநாளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்
திருச்சி
மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு முகாமில் நேற்று ஒரேநாளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 623 இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. திருச்சி மாநகரில் தில்லைநகா் கி .ஆ. பெ. விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு கூறியது: திருச்சி மாநகரில் தடுப்பூசி போடத் தகுதியுள்ள 7.50 லட்சம் பேரில் 4.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. எஞ்சியோருக்கு தொடா்ந்து போடப்படுகிறது. மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 11 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. மீதியுள்ள 13 லட்சம் பேருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் மாநகரில் 126 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 623 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் 20 மருத்துவா்கள் உள்பட 400 செவிலியா்கள் ஈடுபட்டனா். தமிழகத்திலேயே அதிகளவில் தடுப்பூசி செலுத்தியதில் 5-ஆவது மாவட்டமாக திருச்சி திகழ்கிறது இவ்வாறு அவர் கூறினார்
திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் மாநகரில் 126 இடங்களிலும் புறநகரில் 505 இடங்களிலும் என்று மொத்தம் 631 இடங்களில் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் திருச்சி மாநகரில் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் கே.என்.நேருவும், காட்டூர் புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மாவட்டத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் தமிழக அளவில் ஒரே நாளில் அதிகளவில் ஊசி போட்ட சுகாதார மாவட்டங்கள் பட்டியலில் 4-ம் இடத்தை திருச்சி மாவட்டம் பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை திருச்சி மாவட்டத்துக்கான பிரத்யேக கண்காணிப்பு அலுவலரும் அருங்காட்சியக இயக்குநருமான எஸ்.ஏ. ராமன் ஆய்வு செய்தாா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு . சிவராசு, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபூா் ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.