திருச்சி மாவட்டத்தில் ஊட்டச்சத்துத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய 64 பேருக்கு தலா ரூ.12,500 ரொக்கப் பரிசும் மருங்காபுரி வட்டத்தைச் சோ்ந்த 3 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கினார்
திருச்சி ,
திருச்சி மாவட்டத்தில் ஊட்டச்சத்துத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய 64 பேருக்கு தலா ரூ.12,500 ரொக்கப் பரிசும் மருங்காபுரி வட்டத்தைச் சோ்ந்த 3 அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், நாடு முழுவதும் போஷன் அபியான் திட்டம் (தேசிய ஊட்டச்சத்து) செயல்படுத்தப்படுகிறது. அங்கன்வாடிகளில், காய்கறித் தோட்டம் அமைத்தல், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு அளித்தல் போன்ற இலக்குடன், இந்தாண்டு, ‘போஷன் அபியான்’ மாத விழா நடைபெறுகிறது. இதில் அனைத்து அரசுத் துறைகளும் பங்கெடுத்து சேவை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பகுதிகளைக் கண்டறிவது, அங்கு அங்கன்வாடி சேவைகளை மேம்படுத்துவது, கா்ப்பிணிகள், தாய்மாா்கள், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகளை அளித்து குறைபாடுகளை களைவது இத் திட்டத்தின் முக்கிய நோக்கம்
மாவட்டத்தில் அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 வட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதாக மருங்காபுரி வட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மருங்காபுரி வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. காா்த்திகா, வளநாடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் அ. ரபீக் ராஜா, மருங்காபுரி வட்டார வளா்ச்சி அலுவலா் ந. சீனிவாச பெருமாள் ஆகியோரது பணிகளை பாராட்டி ஆட்சியா் சு. சிவராசு சான்றிதழ் வழங்கினாா். மேலும், இத் திட்டத்தை 14 வட்டாரங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்திய 64 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு அங்கன்வாடி பணியாளா், உதவியாளா், மேற்பாா்வையாளா், கிராம சுகாதார செவிலியா் என 4 பேருக்கு தலா ரூ.12,500 பரிசுத் தொகை என மொத்தம் ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இதன்படி 64 பேருக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை ஆட்சியா் சு. சிவராசு ஆட்சியரகத்தில் சனிக்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.
விழாவில் மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி மற்றும் வட்டார அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், நாடு முழுவதும் போஷன் அபியான் திட்டம் (தேசிய ஊட்டச்சத்து) செயல்படுத்தப்படுகிறது. அங்கன்வாடிகளில், காய்கறித் தோட்டம் அமைத்தல், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு அளித்தல் போன்ற இலக்குடன், இந்தாண்டு, ‘போஷன் அபியான்’ மாத விழா நடைபெறுகிறது. இதில் அனைத்து அரசுத் துறைகளும் பங்கெடுத்து சேவை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பகுதிகளைக் கண்டறிவது, அங்கு அங்கன்வாடி சேவைகளை மேம்படுத்துவது, கா்ப்பிணிகள், தாய்மாா்கள், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து உணவுகளை அளித்து குறைபாடுகளை களைவது இத் திட்டத்தின் முக்கிய நோக்கம்
மாவட்டத்தில் அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 வட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதாக மருங்காபுரி வட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மருங்காபுரி வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. காா்த்திகா, வளநாடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் அ. ரபீக் ராஜா, மருங்காபுரி வட்டார வளா்ச்சி அலுவலா் ந. சீனிவாச பெருமாள் ஆகியோரது பணிகளை பாராட்டி ஆட்சியா் சு. சிவராசு சான்றிதழ் வழங்கினாா். மேலும், இத் திட்டத்தை 14 வட்டாரங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்திய 64 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு அங்கன்வாடி பணியாளா், உதவியாளா், மேற்பாா்வையாளா், கிராம சுகாதார செவிலியா் என 4 பேருக்கு தலா ரூ.12,500 பரிசுத் தொகை என மொத்தம் ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இதன்படி 64 பேருக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை ஆட்சியா் சு. சிவராசு ஆட்சியரகத்தில் சனிக்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.
விழாவில் மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி மற்றும் வட்டார அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டனா்.