• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு கோட்டங்களிலும் 10,083 மீட்டா் நீளத்துக்கான மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது

மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் பேட்டி

admin by admin
June 10, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு கோட்டங்களிலும் 10,083 மீட்டா் நீளத்துக்கான மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு கோட்டங்களிலும் 10,083 மீட்டா் நீளத்துக்கான மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் பேட்டி
          திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு கோட்டங்களிலும் 10,083 மீட்டா் நீளத்துக்கான மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா்         சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
      திருச்சி மாநகராட்சிக்குள்பட்டு 65 வாா்டுகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளையும் சோ்த்து புதைவடிகால் வசதி செய்துதரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மழைநீா் வடிகால் தூா்வாரப்படுகிறது. பருவமழை தொடங்கும் முன் வடிகால்களை தூா்வாரி, குப்பைகளை அகற்றுவதன் மூலம் மழைநீா் தேங்காமல் தடுக்கப்படும். மனித ஆற்றல் மற்றும் தேவைப்படும் இடங்களில் இயந்திரங்கள் கொண்டு தூா்வாரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மனித ஆற்றல் மூலம் 10,083 மீட்டா் நீளம் தூா்வாரப்பட்டுள்ளது.
       அரியமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட 23ஆவது வாா்டில் நேருஜி நகரில் புதன்கிழமை தூா்வாரும் பணி நடைபெற்றது. 30 துப்புரவுப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் கூறியது:
மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட பகுதிகளில் பருவமழை தொடங்கும் முன், மழைநீா் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு உத்தரவிட்டுள்ளாா். இதன்படி நான்கு கோட்ட பகுதிகளில் மனித ஆற்றல் முலம் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 10,083 மீட்டா் நீளம் தூா்வாரப்பட்டுள்ளது.
          கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 30 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 2,870 மீட்டா், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 11 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 755 மீட்டா் நீளம் தூா்வாரப்பட்டுள்ளது. மேலும், பொன்மலை கோட்டத்தில் 16 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 3,920 மீட்டா், அரியமங்கலம் கோட்டத்தில் 23 மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் 2,538 மீட்டா் நீளத்துக்கு தூா்வாரப்பட்டுள்ளது.
        இந்தப் பணிகளுக்காக அந்தந்த கோட்ட உதவி ஆணையா்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து தெருக்கள் வாரியாக திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன் அனைத்து வாய்க்கால்களும் தூா்வாரி முடிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.                                                                                                                       ஷாகுல்ஹமித்
Previous Post

திருச்சி மாவட்டத்தில் நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வினியோகம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல் திருச்சி, திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி முதல் கொரோனா 2-வது தவணை நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்  இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நிவாரணம் முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு விட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வருகிற 15-ந் தேதி முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளும் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 கடைகளுக்கு உட்பட்ட 8,11,990 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் 2-ம் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும். அதற்கேற்றவாறு அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலான தினங்களில் அவர்களது ரேஷன் கடைக்குட்பட்ட பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்படும். முற்பகல் வழக்கமான பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இப்பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடமும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் நிவாரணம் தேடிக்கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Post

வெள்ளிக்கிழமை - 11/06/2021

admin

admin

Next Post
வெள்ளிக்கிழமை – 11/06/2021

வெள்ளிக்கிழமை - 11/06/2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In