• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி நவல்பட்டில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, கடற்படை கப்பல்களில் பயன்படுத்தக் கூடிய நவீன ரிமோட்கன்ட்ரோல் துப்பாக்கி கடற்படை வசம் ஒப்படைப்பு

admin by admin
July 18, 2021
in திருச்சி, தேசிய செய்திகள்
0
திருச்சி நவல்பட்டில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, கடற்படை கப்பல்களில் பயன்படுத்தக் கூடிய நவீன ரிமோட்கன்ட்ரோல் துப்பாக்கி கடற்படை வசம் ஒப்படைப்பு
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி நவல்பட்டில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, கடற்படை கப்பல்களில் பயன்படுத்தக் கூடிய நவீன ரிமோட்கன்ட்ரோல் துப்பாக்கி கடற்படை வசம் ஒப்படைப்பு
        திருச்சி நவல்பட்டில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, கடற்படை கப்பல்களில் பயன்படுத்தக் கூடிய நவீன ரிமோட்கன்ட்ரோல் துப்பாக்கி நேற்று கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.
          திருச்சி அருகே துவாக்குடி பகுதியில் துப்பாக்கி தொழிற்சாலை 1966-ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. இங்கு முப்படைகளுக்கும், மத்திய மற்றும் மாநில போலீசாருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகின்றன. 
      இந்தநிலையில் ஆத்மா நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக 12.7 எம்.எம் நிலைப்படுத்தப்பட்ட தொலை கட்டுப்பாட்டு துப்பாக்கியை உள்நாட்டில் தயாரிக்கும் ஒருங்கிணைப்பு தொழிற் சாலையாக, தற்போது இந்த தொழிற்சாலை வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக படைக்கல தொழிற்சாலையில் தொலை கட்டுப்பாட்டு துப்பாக்கியை உற்பத்தி செய்யும் தளம் மற்றும் சோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. திருச்சி நவல்பட்டில் உள்ளஇந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலையில் பல்வேறு ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
                 அந்த வகையில், ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் புதிய ரக எஸ்ஆர்சிஜி ரக துப்பாக்கி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பகிர்ந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இத்துப்பாக்கி வடிவமைக் கப்பட்டுள்ளது.
         புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் துப்பாக்கி 12.7 மி.மீ எம்2 நேட்டோ ரக துப்பாக்கியாகும். இந்த ரக துப்பாக்கியை இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றின் ரோந்துக் கப்பல்களில் பயன்படுத்தலாம். பகல் மற்றும் இரவு நேரங்களில் இலக்கைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வகையிலான நவீன சாதனங்கள் இந்தத் துப்பாக்கியில் உள்ளன.
      இந்தத் துப்பாக்கி தானாகவேஇலக்கை தேடும் வசதி கொண்டது. மின்சாரம் இல்லாதபோதும்,தானியங்கி தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டாலும் கைகளால்இயக்கும் வசதியும்கொண்டது. இந்த ரக துப்பாக்கி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, பயன் படுத்தப்படுவதால் இதற்காக இறக்குமதி செய்யும் செலவு குறையும்.
        இந்தத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று துப்பாக்கித் தொழிற்சாலையில் நடைபெற்றது. படைக்கலன் தொழிற்சாலை வாரியத் தலைவர் சி.எஸ்.விஸ்வகர்மா இந்தத் துப்பாக்கிகளை இந்திய கடற்படை டைரக்டர் ஜெனரல் (ஆயுதப் பிரிவு) கே.எஸ்.சி.ஐயர் வசம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
      இந்த துப்பாக்கியை கப்பல்களின் மேல் பகுதியில் பொருத்தி, கப்பலின் உள்ளே இருந்து ரிமோட் மூலம் இயக்கலாம். பகல் மற்றும் இரவில் இயங்கக்கூடிய சாதனங்களை கொண்ட சிறிய, பெரிய படகுகளில் பொருத்தலாம். இந்த துப்பாக்கியில் கண்காணிப்பு கேமரா, தெர்மல் இமேஜர், லேசர் ரேஞ்ச் பைண்டர் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.  இதனால் இரவிலும், பகலிலும் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, இலக்கை துல்லியமாக கண்டறிந்து குறிபார்த்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சுடமுடியும். இந்த துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தால் நமது நாட்டில் கடல் வழி பாதுகாப்பு மேலும் பலப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
           இந்தத் துப்பாக்கிகள் நமதுரோந்துக் கப்பல்களில் பொருத்தப்படும்போது, நமது தேசத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என துப்பாக்கித் தொழிற்சாலை அதிகாரிகள் கூறினர். முதல் கட்டமாக கடற்படைக்கு 15 துப்பாக்கிகளும், கடலோர காவல் படைக்கு 10 துப்பாக்கிகளும் ஒப்படைக் கப்பட்டுள்ளன.                                                                                  கே.எம்.ஷாகுல்ஹமித்
Previous Post

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சமயபுரம் ஆட்டுச்சந்தை களை கட்டியது. நேற்று கூடிய சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Next Post

கவிஞர் வாலி நினைவு தினம் 

admin

admin

Next Post
கவிஞர் வாலி நினைவு தினம் 

கவிஞர் வாலி நினைவு தினம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In