• Profile
  • Contact
Saturday, March 25, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சியில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அரிசி ஆலையில் குருணையாக்கிய 3 பேர் கைது.

admin by admin
June 26, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சியில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அரிசி ஆலையில் குருணையாக்கிய 3 பேர் கைது.
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சியில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் அரிசி ஆலையில் குருணையாக்கிய 3 பேர் கைது.
திருச்சியில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அரிசி ஆலையில் குருணையாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்-தஞ்சாவூர் சாலையில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து அவற்றை குருணையாகவும், மாவாகவும் அரைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக திருச்சி உணவு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அலாவுதீன், செல்வராசு மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு சென்றனர். அப்போது அங்கு ரேஷன் அரிசியை கொண்டு வந்த 3 பேர், அவற்றை குருணை அரிசியாக அரைத்து மாற்றம் செய்து கொண்டிருந்தனர். 30 மூட்டைகளில், மூட்டைக்கு 40 கிலோ வீதம் மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ரேஷன் அரிசியை கடத்தி கொண்டு வந்து அரிசி ஆலையில் குருணையாக அரைத்து கொண்டிருந்த திருச்சி வரகனேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 28), அரியமங்கலம் உக்கடையை சேர்ந்த ஹக்கீம் (27) மற்றும் அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த பிலவேந்திரன் (49) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், குறைந்த விலைக்கு பல இடங்களில் சிறுக சிறுக ரேஷன் அரிசியை வாங்கி சேமித்து வைத்து மொத்தமாக அரைத்து கோழி தீவனத்திற்கும், மாவாக அரைத்து முறுக்கு போட்டு விற்பனை செய்பவர்களுக்கும் விற்பனை செய்வோம் என கைதான மூவரும் தெரிவித்துள்ளனர்.

ஷாஹுல் ஹமீது.
Previous Post

 திருச்சிக்கு முதன்முறையாக 146 பயணிகளுடன் சிறப்பு விமானத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு.

Next Post

திருச்சி மாவட்டத்தில் 3ஆவது அலை ஏற்படக் கூடாது என்ற வகையில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை களமிறங்கிய மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு

admin

admin

Next Post
திருச்சி மாவட்டத்தில் 3ஆவது அலை ஏற்படக் கூடாது என்ற வகையில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை களமிறங்கிய மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு

திருச்சி மாவட்டத்தில் 3ஆவது அலை ஏற்படக் கூடாது என்ற வகையில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை களமிறங்கிய மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In