திருச்சியில் விவசாயி கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி.
விவசாயி கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றம்சாட் டப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண் டனை பெற்றுத் தந்த போலீஸாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் பாராட்டினார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பெரிய கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த சங்கரும், இவரது நண்பா் சந்தோஷும் கடந்த 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் சாலை பிராட்டியூா் அருகே பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த மோதுவதுபோல வந்த சரக்கு வாகன ஓட்டுநரிடம் தகராறு செய்தனா். அப்போது அவா்களை அருகே உணவகம் நடத்தி வந்த ராஜேந்திரன் (35) கண்டித்தாராம். இதில் கோபமடைந்த பைக்கில் வந்தவா்கள், அவா்களின் உறவினரான மாமலைவாசன் உள்ளிட்ட 5 போ் ராஜேந்திரனைத் தாக்கி அவரது உணவகத்தைச் சூறையாடினா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பெரிய கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த சங்கரும், இவரது நண்பா் சந்தோஷும் கடந்த 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் சாலை பிராட்டியூா் அருகே பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த மோதுவதுபோல வந்த சரக்கு வாகன ஓட்டுநரிடம் தகராறு செய்தனா். அப்போது அவா்களை அருகே உணவகம் நடத்தி வந்த ராஜேந்திரன் (35) கண்டித்தாராம். இதில் கோபமடைந்த பைக்கில் வந்தவா்கள், அவா்களின் உறவினரான மாமலைவாசன் உள்ளிட்ட 5 போ் ராஜேந்திரனைத் தாக்கி அவரது உணவகத்தைச் சூறையாடினா்.
இதில் காயமடைந்த ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்நிலையில் மறுநாள் ராஜேந்திரனின் தம்பியான ராம்ஜிநகா் கே. கள்ளிக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த மூ. ராஜமாணிக்கம் (28), அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான சங்கா் (24), தா்மா என்கிற தா்மராஜ் (23), மோகன் என்கிற நீலமேகம் (25), சம்பத் என்கிற சம்பத்குமாா் (26), மணிவேல் (28), பிரபு (24), மோகன்ராஜ் (24), ஜம்புலிங்கம் என்கிற நீலமேகம் (25), மயிலாடுதுறை வடிவேல் (31) ஆகிய 10 போ் மது போதையில் வந்து மாமலைவாசனின் ஆதரவாளரான ராம்ஜிநகா் ஹரிபாஸ்கா் காலனியைச் சோ்ந்த விவசாயி சுப்பன் என்கிற பாலசுப்ரமணியன் (60), அவரது நண்பரான ராம்ஜிநகா் காந்திநகரைச் சோ்ந்த ஆறுமுகம் (46) ஆகியோரை பெரிய கொத்தமங்கலம் பொதுக்குளத்தில் வைத்து ஆயுதங்களால் தாக்கினா். இதில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் தப்பிய ஆறுமுகம் எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 10 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். திருச்சி 3ஆவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் வியாழக்கிழமை மாலை அளித்த தீா்ப்பில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றம்சாட் டப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண் டனை பெற்றுத் தந்த போலீஸாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் பாராட்டினார்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 10 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். திருச்சி 3ஆவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் வியாழக்கிழமை மாலை அளித்த தீா்ப்பில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றம்சாட் டப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண் டனை பெற்றுத் தந்த போலீஸாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் பாராட்டினார்.
கொலை செய்யப்பட்டது ஏன்? குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திருச்சி ராம்ஜிநகரை அடுத்த கள்ளிக் குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பிராட்டியூரில் டிபன் கடை நடத்தி வந்தார். கடந்த 2013 ஜூன் 26-ம் தேதி ராஜேந்திரனுக்கு தம்பி உறவு முறை கொண்ட சந்தோஷ் என் பவர், திண்டுக்கல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராம்ஜிநகரைச் சேர்ந்த சிலர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். ராஜேந்திரன் கடைக்கு அருகே அந்த ஆட்டோவை சந்தோஷ் முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது ஆட்டோவில் இருந் தவர்களுக்கும் சந்தோஷுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள் ளது. இதையடுத்து ராஜேந்திரன், சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ஆட் டோவை மறித்து தாக்கினர். இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள் ளது. பின்னர், ஆட்டோவில் இருந்த யுவராஜ், குமார் உள்ளிட்டோர் ராஜேந்திரனின் கடைக்கு சென்று அவரையும் அங்கிருந்தவர்களை யும் தாக்கியுள்ளனர். ராஜேந் திரனின் காரையும் சேதப்படுத்தி யுள்ளனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, தாக்குதல் சம் பவம் தொடர்பாக போலீஸாருக்கு சுப்பன் என்கிற பாலசுப்பிரமணி யன்தான் தகவல் தெரிவித்ததாக ராஜேந்திரன் தரப்பினர் கருதியுள்ள னர். இதையடுத்து, ராஜேந்திரனின் அண்ணன் ராஜமாணிக்கம் உள் ளிட்ட 10 பேர் கும்பல், கொத்தமங்கலம் சென்று, அங்கு குளக்கரையில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். அவருடன் படுத்திருந்த ஆறுமுகம் உள்ளிட்டோர் சிலர் காயமடைந்தனர்.
கொலை செய்யப்பட்ட பால சுப்பிரமணியன், இளவயதில் திருச்சி பேருந்து நிலையம் உள் ளிட்ட இடங்களில் லேப்டாப் உள் ளிட்டவைகளை திருடியதாக பல் வேறு வழக்குகள் இருந்தன. வய தான பின்னர், திருட்டு தொழிலை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், போலீஸாருக்கு தகவல் அளிக்கும் இன்பார்மராக வும் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. போலீஸார் மத்தியில் இவருக்கு லேப்டாப் பாலு என்ற பெயரும் உண்டு.