தமிழக அரசு அலுவலர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-II நேரடி நியமன அலுவலர் சங்கம் கோரிக்கை
திருச்சி , ஆகஸ்ட்.30-
தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-II நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அஜந்தா ஹோட்டலில் மாநிலத் தலைவர் மாநில தலைவர் சையது அபுதாகிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசு அலுவலர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது போன்ற முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு அலுவலர்கள் வழங்கிட வேண்டும்வருவாய்த்துறையில் டிஎன்பிஎஸ்சி குரூப் – I l மூலம் தேர்வாகும் 6வது ஊதிய குழுவிற்கு இணையான நேரடி நியமன வருவாய் உதவியாளர்களுக்கு ரூ.9300 என்ற ஊதிய விகிதத்திலும், வட்டாட்சியர்களுக்கு ரூ.15,600 என்ற ஊதிய விகிதத்திலும் ஊதிய மறு நிர்ணயம் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் முஜீப், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தனலிங்கம், முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் விளக்கிப் பேசினார்.தலைமை நிலைய செயலாளர் இசக்கி, மாநில பொருளாளர் ரமேஷ், போஸ் நிதிநிலை அறிக்கை தாக்கல் சங்கத்தில் நிறுவன தலைவர் இருளப்பன் நிறுவனப் பொதுச் செயலாளர் குணசேகரன் மற்றும் ஓய்வு பெற்றசங்கத்தில் நிறுவன தலைவர் இருளப்பன் நிறுவன பொதுச் செயலாளர் குணசேகரன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் அமிர்தலிங்கம் குமரன் வட்டாட்சியர் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் வட்டாட்சியர் சக்திவேல் முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.