• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

சசிகலாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்  திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். 

admin by admin
June 19, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
சசிகலாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்  திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். 
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
சசிகலாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்  திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். 
திருச்சி; அதிமுகவில் வி.கே.சசிகலாவையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ”ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தகர்ந்துவிடும், தமிழ்நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர்கள் கட்சியின் இருபெரும் தலைவர்கள்.

திமுகவின் சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து, மக்களின் ஆதரவுடன் 66 எம்எல்ஏக்களைப் பெற்று சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த வி.கே.சசிகலா,

கட்சித் தொண்டர்களின் பெரும்பான்மை மற்றும் மக்களிடம் அதிமுகவுக்கு உள்ள செல்வாக்கு ஆகியவற்றைப் பார்த்த, தனக்கும், தனது குடும்பத்துக்கும் அரசியலில் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பையும் தேடிக்கொள்ளும் நோக்கில், கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாகத் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும்,

அதை ஊரறியப் பரப்புவதும் என்று விநோதமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இதைக் கண்டிக்கிறோம். நம் உழைப்பைச் சுரண்டும் வகையில் வி.கே.சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுகவை வசப்படுத்திக் கொள்ளவும், அபகரித்துக் கொள்ளவும் வஞ்சக வலையை விரித்துக் கொண்டிருக்கின்றனர்.

சசிகலாவையோ, அவரது குடும்பத்தினரையோ ஒருபோதும் அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் அனுமதிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டோம்.

வி.கே.சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ மற்றும் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கும், லட்சியங்களுக்கும் மாறாகச் செயல்படுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் வலியுறுத்துகிறோம்”. என் ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் மற்றும் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், மாநகர அவைத் தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், மாநகர மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாநகர மாவட்ட பொருளாளர் மனோகரன்,  மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருமண்டபம் பத்மநாபன், கே.சி. பரமசிவன், மாநகர மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி, பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நாகநாதர் பாண்டி, அன்பகழன், ஏர்போர்ட் விஜி, ஜவஹர்லால் நேரு மற்றும் கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

ஷாஹுல் ஹமீது.

Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி அதிமு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

admin

admin

Next Post
தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி அதிமு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி அதிமு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In