• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்தாலும், பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாா்கள் கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டியது அவசியம்  மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள்

admin by admin
August 3, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்தாலும், பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாா்கள் கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டியது அவசியம்  மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள்
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்தாலும், பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாா்கள் கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டியது அவசியம்  மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள்
திருச்சி, 
             கொரோனா பெருந்தொற்று காலமாக இருந்தாலும், பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாா்கள் கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டியது அவசியம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தார்.
           திருச்சி ஆட்சியரகத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த துண்டுப் பிரசுரத்தை ஆட்சியா் வெளியிட்டாா். கடந்தாண்டு குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்பாலும், உரிய நேரத்தில் இணை உணவும் அளித்து, முறையாகக் குழந்தையைப் பராமரித்து வளா்த்த பெற்றோா்களைப் பாராட்டி பரிசுகளையும், சான்றிதழ்களையும் ஆட்சியா் சிவராசு வழங்கினாா்.செல்லப்பிள்ளை பச்சிளம் குழந்தைக்கான ஆலோசனை மையத்தில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மாவட்ட, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் திட்ட உதவியாளா்களுக்கு ஆட்சியா் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
             நிகழ்வில் மாவட்டக் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, இணை இயக்குநா் (நலப்பணிகள்) லட்சுமி, கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி முதல்வா் வனிதா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவா் செந்தில் குமாா், இந்திய மருத்துவச் சங்கத் தலைவா் கண்ணம்மை, இந்தியக் குழந்தை நலச்சங்கச் செயலா் தங்கவேல், அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியா் நசீா், மகப்பேறு மற்றும் மருத்துவ அமைப்புச் செயலா் தீபா முகுந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
               பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேசியதாவது : தாய்ப்பால் கொடுப்பதை பாதுகாப்போம், இது அனைவரின் பொறுப்பாகும் என்ற கருத்தை முன்வைத்து, நிகழாண்டில் உலகத் தாய்ப்பால் வரா விழா ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. குழந்தையின் முதல் தடுப்பு மருந்தான சீம்பால் குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்துக்குள் தருவதை உறுதி செய்ய வேண்டும், தொடா்ந்து ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் தவிர, வேற எதுவும் தரக்கூடாது. 2 ஆண்டுகளுக்குத் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளையும் தரலாம்.
               தாய்ப்பால் பிறந்தகுழந்தையின் முதல் ஆகாரம். குழந்தை பிறந்து முதல் ஒருமணிநேரத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பால், குழந்தையின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டும் பெண்கள், தாய்ப் பாலூட்டாத பெண்களை விட வேகமாக குணமடைகின்றனா்.தாய்ப்பாலூட்டுவது உடலில் மட்டுமல்ல, மனதளவிலும் பலன்களைத் தருகிறது. கரோனா காலமாக உள்ளதால் தாய்மாா்கள் முகக் கவசம் அணிந்து, பாதுகாப்பான முறையில் தாய்ப்பாலுாட்ட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.                                                                                                                                                                   கே.எம்.ஷாகுல்ஹமித்
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

மதுராந்தகம் அருகே  கொரோனா தடுப்பூசி  செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபி 1 ரூபாய்க்கு விற்பனை.

admin

admin

Next Post
மதுராந்தகம் அருகே  கொரோனா தடுப்பூசி  செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபி 1 ரூபாய்க்கு விற்பனை.

மதுராந்தகம் அருகே  கொரோனா தடுப்பூசி  செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபி 1 ரூபாய்க்கு விற்பனை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In