• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

கொரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு உடையுடன் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆக மட்டுமே இருக்க முடியும்

admin by admin
June 1, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
 கொரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு உடையுடன் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆக மட்டுமே இருக்க முடியும்
     மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு நீர் திறக்கும் முன் டெல்டா மாவட்டங்களில் ரூ 66 கோடி மதிப்பில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு பேட்டி
திருச்சி
   மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு நீர் திறக்கும் முன் டெல்டா மாவட்டங்களில் ரூ 66 கோடி மதிப்பில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்
     திருச்சி புத்தூரில் உள்ள அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கென புதிதாக 75 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அவற்றை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர்.  அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி, சிறுகளப்பூா் மற்றும் திருவெறும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் நீா்நிலைகள் தூா்வாரும் பணிக்கான தொடக்க நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். புள்ளம்பாடி பகுதியில் தூா்வாரும் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் நேரு கூறுகையில்,:
    தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து 150 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குகின்றனர்.  அவற்றில் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 75-ம், தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 75 என பிரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 1099 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 775 காலியாக உள்ளன. ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 743-ல் 30ம், ஆக்ஸிஜன் அல்லாத 356 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தில் 145 படுக்கைகளும் காலியாக உள்ளன. இங்கு நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருவதும், அதேபோல் 200க்கும் மேற்பட்டோர் குணமாகி செல்வதுமாக உள்ளது. எனவே கடந்த நாட்களை ஒப்பிடும்போது, கரோனா பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் வகையில் மருத்துவ பணியாளர்கள் தேர்வும் நடந்து வருகிறது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு என ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் ரூ. 66 கோடி மதிப்பில் தூர்வாறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாறும் பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு உடையுடன் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆக மட்டுமே இருக்க முடியும். 
         நாமக்கல், ஈரோடு, கரூா், அரியலூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா் உள்ளிட்ட காவிரி டெல்டாபகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள், வாய்க்கால்கள், பிரிவு வாய்க்கால்களில் தூா்வாரினால் தான் தண்ணீா் கடை மடை பகுதிகள் வரை எளிதாக சென்றடையும்.
         அதன்படி டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து நீா் நிலைகளும் ரூ. 66 கோடியில் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 5.62 கோடியில் தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் 63 பணிகளில் 162.81 கி.மீ தூரம் வரை தூா்வார வழிவகை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
          நிகழ்ச்சிகளில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் 

சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா,  லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அ.சௌந்தரபாண்டியன், திருச்சி நீா்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் (நீா்வள ஆதாரத்துறை நடுக்காவிரி வடிநில வட்டம்) வேட்டைசெல்லம், செயற் பொறியாளா் (அரியாறு வடிநில கோட்டம்) சரவணன், உதவி செயற்பொறியாளா் ஜெயராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு: திருச்சி மாநகராட்சி சாா்பில், பொன்மலை கோட்டம், 46 ஆவது வாா்டு, பெரிய மிளகுபாறை , வேடுவா் தெருவில், ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட தண்ணீா் தொட்டியை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா்.   சுமாா் 400 அடி ஆழத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட தண்ணீா் தொட்டி மூலம் சுமாா் 200 குடும்பங்கள் பயன் பெறும்.

                                                                                                                                              ஷாகுல்ஹமித் 
Previous Post

மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது ஆகியோர் ஆய்வு

Next Post

தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு! 40 வருட நிறைவு

admin

admin

Next Post

தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு! 40 வருட நிறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In