கீழக்குறிச்சி -நத்தமாடிபட்டி பேருந்து நிறுத்தத்தில் புதிய பயனியர் நிழற்குடை திறப்பு விழா
ஆகஸ்ட். 10 –
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்தில் கீழக்குறிச்சி -நத்தமாடிபட்டி பேருந்து நிறுத்தத்தில் புதிய பயனியர் நிழற்குடை திறப்பு விழா திருவெறும்பூர் தொகுதிசட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 2020 – 21 ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையையும் அதனைத் தொடர்ந்து கிழக்குறிச்சியில் புதிதாக அமைய உள்ள பூங்கா அமைவதற்கான பணிகளுக்காக அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் ஒன்றியக் ச் செயலாளர் மாரியப்பன் பகுதிச் செயலாளர் கொட்டப்பட்டு இ. எம். தர்மராஜ், நத்தம்மாடிப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயராஜ் ஜோஸ்பின், கங்காதரன் ,பாலமுருகன் , ரமேஷ் மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நகர் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் சமுக இடைவெளியுடன் முகக்கவசம் அணந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்