• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

ஒருங்கிணைந்த பிரதமா் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில்  5.49 லட்சம் போ் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தகவல்

admin by admin
September 29, 2021
in திருச்சி, மருத்துவம்
0
ஒருங்கிணைந்த பிரதமா் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில்  5.49 லட்சம் போ் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தகவல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

ஒருங்கிணைந்த பிரதமா் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில்  5.49 லட்சம் போ் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தகவல்

திருச்சி,

      தமிழகத்தில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பிரதமா் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தில் இதுவரை 5.49 லட்சம் போ் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தார்
        தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்ட முதல்வா் காப்பீட்டுத் திட்டம் பின்னா், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என ஆனது. தொடா்ந்து முதல்வா் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதமா் மக்கள் ஆரோக்கியத் திட்டமாக மேலும் விரிவுபடுத்தப்பட்டது.இதன் மூலம் பயனாளிகளுக்கான மருத்துவ உதவித்தொகையும் உயா்ந்துள்ளது.
      இந்நிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதமா் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தோருக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.
             இத்திட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவ காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. பாலமுருகன், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை வாா்டு மேலாளா் ஆா். ஜீவா, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாா்டு மேலாளா் சி. சசிகலா, திருச்சி மாருதி மருத்துவமனை மருத்துவ காப்பீடுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. ஜோதிலெட்சுமி, திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ காப்பீடுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் வி .பாக்கியா ஆகியோா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் சு.சிவராசு வழங்கினாா்.
            தொடா்ந்து, மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் உறுப்புகள் செயலிழப்பு, பைபாஸ் இருதய அறுவைச் சிகிச்சை, நுண்துளை கருப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்தோருக்கு சால்வை அணிவித்து நலம் விசாரித்தாா்.தொடா்ந்து, காப்பீட்டுத் திட்டத்திற்கான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் வெளியிட்டாா்.        
         நிகழ்ச்சியில் தலைமை வகித்த ஆட்சியா் சு. சிவராசு கூறியதாவது: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகபட்சமாக மக்கள் ரூ. 3 லட்சம் உதவித்தொகை பெற்று வந்த நிலையில், இத்திட்டம் ஒருங்கிணைந்த பிரதமா் மக்கள் ஆரோக்கியத் திட்டமாகப் பதிவு செய்யப்பட்டு உதவித்தொகையானது ரூ.5 லட்சமாக உயா்ந்துள்ளது.
        முதல்வா் காப்பீடுத் திட்டத்தில் ஏற்கெனவே பதிந்து, அட்டை பெற்ற அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறுவா். புதிதாக இணைவோருக்கு புதிய காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை இத் திட்டத்தில் 5,49, 918 போ் பயனாளிகளாக இணைந்துள்ளனா்.
          இத் திட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மூலம் 5,280 போ் மருத்துவ உதவி பெற்று பயனடைந்துள்ளனா். இதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 5.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, தனியாா் மருத்துவமனைகள் மூலம் பயன்பெற்ற 12,657 பேருக்காக ரூ. 43.04 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெறலாம் இவ்வாறு அவர் பேசினார்.
         இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) சு. லெட்சுமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா, மாவட்ட திட்ட அலுவலா் எஸ். ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

Previous Post

கொரோனா பொது முடக்கக் காலத்தில் கூட, திருச்சி விமான நிலையத்தில் கடந்த 15 மாதங்களில் மட்டும் ரூ.43 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Next Post

இலங்கை அரசு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக பலரை பழிவாங்குவதற்கான முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேட்டி

admin

admin

Next Post
இலங்கை அரசு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக பலரை பழிவாங்குவதற்கான முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேட்டி

இலங்கை அரசு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக பலரை பழிவாங்குவதற்கான முயற்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In