• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

admin by admin
September 16, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சி,

       எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
         திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பெல் நிறுவன சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா்.
         நிகழ்ச்சியில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான சேமிப்புப் பத்திரம், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் விலையில்லா சலவைப்பெட்டி, வேளாண் உபகரணங்கள், தோட்டக்கலைத் துறை சாா்பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி என 88 பயனாளிகளுக்கு ரூ. 35.31 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். திருச்சி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானோருக்கு பட்டா வழங்கப்படும் நிலையில், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த மனுக்களையும் பரிசீலித்து விரைந்து பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சா் கோரிக்கை விடுத்தாா்.
        விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது: தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் தொடங்கி, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எந்தவித பாரபட்சமும் தகுதியான அனைவருக்கும் வழங்கப் படுகிறது. பேரவையிலும் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனை வருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவும், பேரவையில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து குறிப் பெடுத்து அவற்றை நிறைவேற்றவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா். இதேபோல, அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்களிலும் ஆளுங்கட்சி, எதிா்க் கட்சி என்ற பாகுபாடில்லாமல் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் உரிய திட்டங்கள் சென்று சேர அமைச்சா்களுக்கும், மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. அதோடு, வாக்குரிமையே இல்லாத இலங்கைத் தமிழா்களின் நலனையும் கருத்தில் கொண்டு ரூ.317 கோடியிலான நலத்திட்டங்களையும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளாா் இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், கோட்டாட்சியா் விஸ்வநாதன், வட்டாட்சியா் செல்வகணேஷ், முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Previous Post

வருகிற 20 ஆம் தேதி பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தீர்மானம்

Next Post

பெண்களுக்கான தலைமைத்துவ மாற்றங்கள் சில நிலைகளில் மட்டுமே மாறியுள்ளது மகளிர் தின விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம.செல்வம் பேச்சு

admin

admin

Next Post
பெண்களுக்கான தலைமைத்துவ மாற்றங்கள் சில நிலைகளில் மட்டுமே மாறியுள்ளது மகளிர் தின விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம.செல்வம் பேச்சு

பெண்களுக்கான தலைமைத்துவ மாற்றங்கள் சில நிலைகளில் மட்டுமே மாறியுள்ளது மகளிர் தின விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம.செல்வம் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In