• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இராமநாதபுரம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டதால்… இரும்பு கதவிற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபாடு

admin by admin
September 15, 2021
in ஆன்மிகம் செய்திகள், ராமநாதபுரம்
0
இராமநாதபுரம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டதால்… இரும்பு கதவிற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபாடு

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

0
SHARES
257
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
இராமநாதபுரம் அருகே கோவிலுக்கு பூட்டு போட்டதால்… இரும்பு கதவிற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபாடு
             இராமநாதபுரம், செப்,15-
இராமநாதபுரம் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் வழிபாடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் வருவாய் துறையினர் பூட்டு போட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்காத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
           கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி போலீஸ் சரகம் சங்கன்வலசை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு, சின்னாண்டிவலசை ஊராட்சிக்குட்பட்ட சங்கன்வலசை, மகுளிவலசை  மற்றும்  அதனைச் சுற்றியுள்ள பகுதி  மக்கள், வழிபாடு செய்து வந்தனர்.  இந்த நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அதனையொட்டி இரு தரப்பினருக்கும் காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதில் பிரச்சினை எழுந்தது. 
         இந்த பிரச்சினை குறித்து விசாரித்த கீழக்கரை வட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பிலும் தலா இரண்டு பேர் வீதம் தேர்வு செய்து கோவிலில் வழிபாடு நடத்த குழு  அமைத்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 14 ந்தேதி கிராம பொதுமக்கள் காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடத்த சின்னாண்டிவலசை ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சய் காந்தி மூலம் காவல் துறை மற்றும் வருவாய் துறையினரிடம் அனுமதி பெற்று விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அப்போது அந்த பகுதி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முனியாயி அவர்களின் கணவர் செவத்தான் என்ற வெள்ளையன்  தரப்பினர் பொங்கல் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்கு பூட்டு போட்டனர்.  இதனையறிந்த திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான வருவாய் துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பூட்டை அகற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இருதரப்பிற்கும் இடையே   உடன்பாடு ஏற்படாததால் வருவாய் துறையினர் கோவிலுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
             விழாவிற்கு ஏற்பாடுகளை செய்த பொதுமக்கள் வேறு வழியின்றி கோவிலுக்கு வெளியே உள்ள இரும்பு கதவில் அம்மனுக்கு அணிவிக்கும் பட்டு, சந்தனம் , மாலைகளை அணிவித்து பொங்கல் படைத்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருவாய் துறையினர் பூட்டு போட்டு பொதுமக்களை வழிபாடு நடத்த அனுமதிக்காத சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கணவரின் இந்த செயல் அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் நினைவு இல்லத்தில் தொழிலதிபர் ஆர்.வி.ரஞ்சித் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Post

கோயில் நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை, 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களைப் பணி நிரந்தம் செய்யப்படும்  திருச்சியில் பி.கே.சேகர்பாபு பேட்டி

admin

admin

Next Post
கோயில் நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை, 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களைப் பணி நிரந்தம் செய்யப்படும்  திருச்சியில் பி.கே.சேகர்பாபு பேட்டி

கோயில் நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை, 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களைப் பணி நிரந்தம் செய்யப்படும்  திருச்சியில் பி.கே.சேகர்பாபு பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In