இராமநாதபுரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.
பட்டணம்காத்தான், ஜூலை.30 –
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக 333 அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 369 பயனாளிகளுக்கும் என மொத்தம் 702 பயனாளிகளுக்கு ரூ.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் , உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா , இ.ஆ.ப. , அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் (இராமநாதபுரம் ) திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் , ( பரமக்குடி ) திரு.செ.முருகேசன் அவர்கள் , கூடுதல் ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் உட்பட பலர் உள்ளனர் . செய்தியாளர் வாசு.ஜெயந்தன்.