இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 13/08/2021
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். லூக்கா 6:38
பிரச்சனை உங்களுக்கு என்ன செய்கிறது என்பதைவிட பிரச்சனைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே அவசியமானது.
“ What you do to the problem is more important than what the problem is doing to you”
உங்கள் தரிசனத்தை நிறைவேற்றும்பொழுது பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. பிரச்சனை உங்களுக்கு என்ன செய்கிறது என்பதைவிட பிரச்சனைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது. வறுமை, கடன் பிரச்சினை உங்களுக்கு என்ன செய்கிறது என்பதையே சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். அதற்குபதிலாக வறுமை என்ற பிரச்சனைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது. வறுமையை போக்க கர்த்தருக்கு நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்கள்?. நீங்கள் கர்த்தருக்கு கொடுங்கள். அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்.
அறிக்கை:
என்னுடைய வறுமை என்ற பிரச்சினையைத்தீர்க்க பரிகாரமாக நான் கர்த்தருக்கு கொடுப்பேன். அவர் அதை வர்த்திக்கச்செய்து திரும்பத்தருவார். ஆதலால் என் வறுமை தீரும்.ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com