இசை ஞானி, இளையராஜாவுக்கு இன்று வயது 78.
சென்னை,
பெயருக்கு ஏற்ப, கேட்பவர்கள் மனதுக்குள் அமைதியை உருவாக்கி, ஞானத்தை ஊட்டக் கூடியது அவரது இசை. 1943, ஜுன் 2ம் தேதி, தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்தது இசை.. ஆம் இசை என்றாலும் இளையராஜா என்றாலும் ஒன்றுதானே. 1976ல் வெளிவந்த ”அன்னக்கிளி” படத்தின் மூலம் ஞானதேசிகனாக இருந்தவர் இளையராஜாவாக புது அவதாரம் எடுத்தார். அன்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை பின்நாளில் இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவனாக உருவெடுப்பார் என்று! கிராமத்து கீதங்களுக்கு புத்துயிர் கிடைக்கபெற்றது இவரின் இசையில் தான்.
. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எற்றார்போல் இசையமைத்தால் அவர் இசையமைப்பாளர். ஆனால் தன் இசையாலே ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியுமென்றால் அவர் தான் இசைஞானி! தூர பயணங்களில் நம்மை தாலாட்டும் தாயாய், வேலை பளுவில் துணை நிற்கும் தோளாய், காதல் நேர மயக்கமாய், கொண்டாட்ட நேரங்களில் குதூகளமாய் இருப்பது இந்த ராகதேவனின் மெட்டுக்களே!
இசைஞானியின் இசைக்கு நல்ல தீனி கொடுப்பது போல காட்சி அமைப்புகளை தன் படத்தில் வைக்கும் இயக்குனர்களான பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா வரிசையில் ஃபாசிலுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு என்பதற்கு அவர் படங்களே சாட்சி.
இது வரைக்கும் கிட்டதட்ட 5600 பாடல்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்திடாத இல்லை இல்லை செய்ய முடியாத சாதனையாக 1000த்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத் திருக்கிறார். பாலசுப்பிரமணியம், யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜானகி, சித்ரா இன்னும் பல குரல் சக்ரவர்த்திகள், வைரங்களாய் மிளிர்ந்தனர்.
வசனங்கள் அற்ற காட்சிகளுக்கு பின்னனி இசைக்கு மண் சார்ந்த கதைத் தேவைக்கு உயிர் கொடுக்க உன்னை போன்ற ஒரு இசை இன்றளவில் எங்கும் இல்லை. இதுவரை உலகம் முழுவதுமிருந்து வந்த சிறந்த 10 பாடல்களில் இளையராஜா இசையமைத்த தளபதி படத்தில் இடம் பெற்ற பாடலான “ராக்கம்மா கையதட்டு” இடம்பெற்றதே இவரின் இசைக்கு கிடைத்த பெரிய மரியாதை ஆகும். இசைஞானி லண்டனில் உள்ள Trinity College of Music ல் தங்கப்பதக்கம் வென்றவர், இவரின் சிறப்பான இசைக்கு 4 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மிடாஸ் டச்சை நாங்கள் உணர்ந்ததில்லை ஆனால் இந்த மேஸ்ட்ரோவின் டச்சில் எப்போதுமே லயித்திருப்போம். காலங்களை உறையவைக்கும் உன் உன்னத இசையால் என்றுமே எங்களை ஆட்சி செய்யும் அரசியல் நீ. எத்தனை உறவுகள் இருந்தாலும் தாயைப்போல் ஆகுமா? எத்தனை எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்கள் ராஜாவாக முடியுமா? ஒரு படத்தில் சொன்னது போல் ரேடியோவை கண்டுபிடித்தது மார்க்கோனி ! அதை கேட்க வைத்தது நம் இசைஞானி! ஏனென்றால் என்றுமே எங்கள் இளையராஜா தான் இசையின் ”ராஜா”!வாழும் சகாப்தமான இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளான இன்று இவரை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது. இன்னும் உங்கள் இசையால் எங்கள் செவிகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று தமிழிசையின் பிதாமகனுக்கு நமது தமிழன் குரலின் மனார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
புவி பாலாஜி