திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புற்றுநோய்க்கு கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உடல்நிலை நலிவடைந்தது. இந்நிலையில் சமீபத்தில் குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆ.ராசா அவருடன் இருந்து அவரை கவனித்து வந்தார்.
பரமேஸ்வரிக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சிகிச்சை பெற்றுவந்த பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கேட்டறிந்தனர். இந்நிலையில் இன்று ரெலா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் பரமேஸ்வரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகுல்