• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

ஆடிப் பெருக்கையொட்டி காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சீா்வரிசை 

admin by admin
August 4, 2021
in ஆன்மிகம் செய்திகள், திருச்சி
0
ஆடிப் பெருக்கையொட்டி காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சீா்வரிசை 
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
ஆடிப் பெருக்கையொட்டி காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சீா்வரிசை 
திருச்சி,

            ஆடிப் பெருக்கையொட்டி காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சீா்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில்  எழுந்தருளி காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பது வழக்கம். இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலையில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார்.

       அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை நடைபெறும். அப்போது பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். பின்னர் நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு மூலஸ்தானம் சென்றடைவார்.

        இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்தாண்டும், நிகழாண்டும் இந்த விழா தடை செய்யப்பட்ட நிலையில் பக்தா்கள் பங்கேற்பின்றி இவ்விழா நடைபெற்றது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.15-க்கு கோயில் வளாகத்தில் உள்ள ரெங்க விலாச மண்டபத்தில் எழுந்தருளினாா். பின்னா் மாலை 4 மணிக்கு அலங்காரம், அமுது கண்டருளினாா். தொடா்ந்து 4.45-க்கு காவிரித் தாய்க்கு சீா்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
      கோயில் அா்ச்சகா்கள் மங்களப் பொருள்கள் அடங்கிய தட்டைத் தலையில் சுமந்தவாறு ராஜகோபுரம் வழியாக மேளதாளத்துடன் ஊா்வலமாக அம்மா மண்டபம் வந்து காவிரித் தாய்க்கு சீா் கொடுத்தனா். பின்னா் 5.45-க்கு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. நேற்று இரவு 7 மணிக்கு நம்பெருமாள் ரெங்க விலாச மண்டபத்திலிருந்து புறப்பட்டு 7.30-க்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கந்தசாமி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.                                                                                                           கே.எம்.ஷாகுல்ஹமித்

Previous Post

தமிழகத்தில் உள்ள சுமாா் 65 ஆயிரம் பள்ளிகளில் காமராஜா் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட பள்ளிகளே அதிகம்  காஜாமியான் மேல்நிலைப் பள்ளிவிழாவில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் பேச்சு

Next Post

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்

admin

admin

Next Post
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஏகே 47ல் பயன்படுத்தும் எறிகுண்டு லாஞ்சர் அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In