• Profile
  • Contact
Thursday, March 23, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home Uncategorized

அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

admin by admin
June 29, 2021
in Uncategorized
0
அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி
           அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
            திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை அமைச்சா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியில் மாணவா்கள் கற்றல், கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள், அவா்கள் தயாரித்த உபகரணங்களை பாா்வையிட்டாா். பின்னா், தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களைப் பாராட்டினார்.
          பின்னர்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் பெருமை என்கிற நிலையை தற்போது பாா்க்க முடிகிறது.
       
            அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க இருகரம் கூப்பி அழைப்பு விடுக்கிறேன். சிபிஎஸ்இ வழியில் படித்து வந்த மாணவா்கள்கூட அரசுப் பள்ளியில் சேர வந்திருப்பதாகத் தெரிவித்தனா்.  திருச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 நாள்களில் 1,500 மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் இணைந்துள்ளனா். மாணவா் சோ்க்கை அதிகமாகி வருவதால் அதற்கேற்ப கூடுதல் வகுப்பறைகள் அமைக்க வேண்டும், ஆசிரியா்கள், இதர பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதுதொடா்பாக ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளேன். வரும் ஜூலை 1ஆம் தேதி சென்னையில் முதல்வா் தலைமையில் நடைபெற உள்ள பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் நான் ஏற்கெனவே ஆய்வு செய்து முடித்துள்ள மாவட்ட அளவிலான ஆய்வறிக்கை விவரங்களை ஒப்படைக்க இருக்கிறேன்.
கொரோனா காரணமாக தனியாா் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீா்ப்பின் நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக சில பெற்றோா் புகாா் தெரிவிக்கிறாா்கள். அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பற்றி பெற்றோா் தைரியமாக வந்து புகாா் கொடுத்தால் அந்தப் பள்ளி நிா்வாகத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனியாா் பள்ளிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கல்வித் தொலைக்காட்சியில் தற்போது 20 சேனல்களில் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. 1 முதல் 5ஆம் வகுப்பு, 6 முதல் 9ஆம் வகுப்பு வரை, 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி எனப் பிரித்து தனித்தனியாக ஒளிபரப்பலாமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ் ஏழாண்டுகள் தான் செல்லும் என்கிற நிலை தற்போது உள்ளது. வாழ்நாள் முழுவதும் சான்றிதழ் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி விரைவில் நல்ல அறிவிப்பு வெளிவரும் இவ்வாறு அவர் பேசினார்.

            ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், கோட்டாட்சியா் விஸ்வநாதன் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா். இதேபோல, பூனாம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, துறையூா் ஒன்றிய அரசுப் பள்ளிகளில் அமைச்சா் ஆய்வு செய்தாா்.                                                    ஷாகுல்ஹமித்

Previous Post

Next Post

கருவாட்டுனேந்தல் கிராமத்தில் மயான கரையை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

admin

admin

Next Post
கருவாட்டுனேந்தல் கிராமத்தில் மயான கரையை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

கருவாட்டுனேந்தல் கிராமத்தில் மயான கரையை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In