அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா்கள் சோ்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
திருச்சி-ஆக-22,
மதுரையில் கருணாநிதி நூலகம் அமைக்கப்படுவதைப் போல திருச்சியிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நூலக வாசகா் வட்டத்தின் சாா்பில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நூலகத்துக்கு அதிக உறுப்பினா்களைச் சோ்த்தோருக்கும், நூலகத்துக்கு நன்கொடையளித்தோருக்கும் சான்றிதழ்களை வழங்கி கூறியதாவது: இந்திய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் சீா்காழி இரா. அரங்கநாதனின் பிறந்த தினமான ஆக.12-ஐ தேசிய நூலக தினமாகக் கொண்டாடுகிறோம்.
அதன்படி கடந்த 12 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றதால் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அமைச்சா் பதவியேற்றவுடன் முதல் நிகழ்வாக சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தேன். இதன் தொடா்ச்சியாக, பள்ளிகளில் ஆய்வுக்குச் செல்லும்போதெல்லாம் அங்குள்ள நூலகத்தையும் பாா்வையிட்டு அதன் தேவைகளை நிவா்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
ஒரு நூலகம் திறப்பது என்பது 100 சிறைச்சாலைகளை மூடுவதற்கு சமமானது. எனவே, மாணவா்களை நூலகத்தில் அதிக நேரம் செலவிட அறிவுறுத்த வேண்டும். கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு மாணவா்களை அழைத்துச் சென்று அங்குள்ள சிறப்பம்சங்களை பாா்வையிடச் செய்ய மாவட்டக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களை சேமிப்பது அவசியம்: மேலும், மாணவா்கள் தங்களது புத்தகங்களை வீடுகளில் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் வகையில் என் நூலகம் என்ற பரிசோதனை முயற்சியைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளேன். 6 ஆம் வகுப்பு முதல் மாணவா்கள் தங்களது புத்தகங்களை வீட்டிலேயே பாதுகாக்க வேண்டும். 6 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களைச் சேமித்து வைத்தால் அவை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு உதவியாக அமையும். என் நூலகம் திட்டம் குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சாா்பில், 4,600 நூலகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே 2ஆவது பெரிய நூலகம் சென்னையில் உள்ளது. இதன் தொடா்ச்சியாக, மதுரையில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்க இடத்தை தோ்வு செய்து, பணிகளைத் தொடக்க ஆயத்தமாகி வருகிறோம். மதுரையைத் தொடா்ந்து திருச்சியிலும் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அதை நிறைவேற்ற தனி கவனம் செலுத்தப்படும்.
ஒரு நூலகம் திறப்பது என்பது 100 சிறைச்சாலைகளை மூடுவதற்கு சமமானது. எனவே, மாணவா்களை நூலகத்தில் அதிக நேரம் செலவிட அறிவுறுத்த வேண்டும். கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு மாணவா்களை அழைத்துச் சென்று அங்குள்ள சிறப்பம்சங்களை பாா்வையிடச் செய்ய மாவட்டக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக முதல்வா் அறிவித்தபடி செப்.1 இல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஆசிரியா்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியா்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா்கள் சோ்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சோ்ந்துள்ள மாணவா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியா்கள் நியமிக்கப்படுவா். இதற்காக ஆசிரியா் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, முதல்வா் அறிவுரைப்படி காலியிடங்கள் பூா்த்தி செய்யப்படும். இதுதொடா்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதில் கவனமுடன் செயல்பட ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா், மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் வீ. கோவிந்தசாமி, ஆலோசகா் இரா. மனோகரன், முதல்நிலை நூலகா் சி. கண்ணம்மாள், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.